new photo e1649743324960
அரசியல்இலங்கைசெய்திகள்

7 ஆவது நாளாகவும் தொடர்கிறது அரசுக்கெதிரான போராட்டம்!!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி கடந்த 6 நாட்களாக காலி முகத்திடலில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் போராட்டம் 7 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

இளைஞர், யுவதிகள், பல்கலை மாணவர்கள், மதகுருமார்கள், சமூக நலன் விரும்பிகள் என அனைத்து மக்களும், இன, மத, மொழி கடந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலி முகத்திடலில் ஆரம்பமான இந்த போராட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆதரவுடன் தொடர்ச்சியாக இரவு பகல் பாராது இடம்பெற்று வருகிறது.

ஜனாதிபதி செயலகம் முன்பாக தினமும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, ஆர்ப்பட்டத்தில் பங்குபற்றுவோர் தங்குவதற்கென காலி முகத்திடலில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் என தேவையான உதவிகளும் மக்களால் வழங்கப்பட்டு வருகின்றன.

நேற்று தமிழ் – சிங்கள புத்தாண்டு நாளிலும் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்றது. போராட்டக்களத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றதுடன் பலகாரங்களும் வழங்கப்பட்டன.

‘கோட்டா கோ கம’ என்னும் பெயரிடப்பட்டுள்ள குறித்த பகுதியில், 7 ஆவது நாளாக அரசுக்கெதிரான கோஷங்களுடன் இன்றும் போராட்டம் தொடர்கிறது.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 207
செய்திகள்இலங்கை

புத்தாண்டு விடுமுறை சோகம்: 4 நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடும் வகையில் நீர்நிலைகளுக்குச் சென்றவர்களில், கடந்த ஏப்ரல் 12...

world 206
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மல்லாவியில் இரு யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகம்: மத போதகர் உள்ளிட்ட மூவர் அதிரடி கைது!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி – வவுனிக்குளம் பகுதியில் இரு யுவதிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில்...

world 205
செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் 2026 தேர்தல் அறிக்கை: மகளிருக்குத் தங்கம் மற்றும் இலவச மின்சார வாக்குறுதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான...

world 204
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் 21 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை: பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

இலங்கையின் 21 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு (Heat...