ஆளுங்கட்சி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பந்துல குணவர்தனவின் வீடும் கொளுத்தப்பட்டுள்ளது. நுகேகொடையில் அமைந்துள்ள அவரின் இல்லமே, போராட்டக்காரர்களால் இவ்வாறு தாக்கி, தீவைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் வீடும் தாக்கப்பட்டுள்ளது. #SriLankaNews
அமைச்சர்கள் உட்பட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலரின் வீடுகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. ஒரு சிலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் வீடுகள், மக்களால் தாக்கப்பட்டுள்ளன. ரமேஷ் பத்திரவின்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 29 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் அவசரகால சட்டம்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியால் மேற்கொள்ளப்படும் பாத யாத்திரை இன்று கண்டியில் ஆரம்பமாகின்றது. ‘சுதந்திரத்துக்கான போராட்டம்’ எனும் தொனிப்பொருளின்கீழ் முற்பகல் 9 மணிக்கு கண்டியில் ஆரம்பமாகும் பேரணி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டில் பல பாகங்களில் இன்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள்மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலுக்கும் கடும்...
ரம்புக்கனை போராட்டக்காரர்கள்மீது பொலிஸார் மேற்கொண்டுள்ள மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. அத்துடன், அரசின் – அரச பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பாதகாப்பு தரப்பினர் துணைபோகக்கூடாதெனவும், நாட்டையும், மக்களையும் காக்க வேண்டிய பொறுப்பு...
“ காலி முகத்திடலில் போராடும் இளைஞர்கள் ஆயுதத்தை கையில் எடுக்கவில்லை. கிளர்ச்சி செய்யவும் இல்லை. மாறாக அரசமைப்புக்குள் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளவே முற்படுகின்றனர். எனவே, இளைஞர்களின் கோரிக்கைகளையும் உள்வாங்கியே தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு அரசியல் தீர்வு காணப்பட...
ரம்புக்கனையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மையின்போது காயமடைந்த 3 பேரில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், காயமடைந்த 15 பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். எரிபொருள்...
” கல்வீச்சுத் தாக்குதலுக்கு பதில் துப்பாக்கிச்சூடா பொலிஸ்மா அதிபரே? ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் மற்றும் கொலையை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.” இவ்வாறு தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை...
எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு அதிகரிக்கப்பட்டமையை கண்டித்து ரம்புக்கனையில் பொதுமக்களால் இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவதற்காக ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை அடுத்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது துப்பாக்கிச்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் விசேட கூட்டறிக்கையொன்றும்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு தன்னெழுச்சி போராட்டத்துக்கு ஆதரவு வலுத்துவரும் நிலையில், ஆதிவாசிகளும் போராட்ட களம் வந்துள்ளனர். ‘கோட்டா கோ கம’ போராட்ட களத்துக்கு...
“மக்களின் அமைதியான போராட்டத்தைச் சீர்குலைக்கும் அரசின் முயற்சி நாட்டுக்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.” – இவ்வாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில்...
காலிமுகத்திடல் பகுதியில் திடீரென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் கனரக வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பலகோணங்களில் தகல்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில் தன்னெழுச்சி...
கொழும்பு – காலிமுகத்திடலில் தொடர்ந்து ஏழாவது நாளாக இடம்பெற்று வரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிரான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவானான சனத் ஜயசூரியவும் கலந்துகொண்டுள்ளார். தொடர்ந்தும் இந்தப்...
யாழ்ப்பாணம் நகரில் மாபெரும் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஜனநாயக ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பு அறிவித்துள்ளது ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது காலிமுகத்திடலில் ‘கோத்தபாய...
“அரசிலிருந்து அனைத்து ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களையும் பதவி விலகக் கோரி கொழும்பு – காலிமுகத்திடலில் இளைஞர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கிலிருந்தும் இளைஞர்கள் சென்று முழுமையான ஆதரவு வழங்க வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக்...
கொழும்பு – காலி முகத்திடலில் இன்று ஏழாவது நாளாக அரச எதிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டுவரும் போராட்டக்காரர்கள் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். தமது ஐந்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தாம் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும்...
கொழும்பு – காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு கோட்டாபய அரசுக்கு எதிராக மக்கள் நடத்தும் எழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று...
அரசுக்கு ஆதரவு தெரிவித்து இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட, சாந்த பண்டாரவின் வீட்டுக்கு முன்பாக மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவரின் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இலஞ்சமாக பெற்றுக்கொண்ட இராஜாங்கப் பதவியை உடனடியாக...