ranil 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்கள் நடத்தையே மரியாதையை தீர்மானிக்கும்! – அரசுக்கு ரணில் அறிவுரை

Share

“ காலி முகத்திடலில் போராடும் இளைஞர்கள் ஆயுதத்தை கையில் எடுக்கவில்லை. கிளர்ச்சி செய்யவும் இல்லை. மாறாக அரசமைப்புக்குள் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளவே முற்படுகின்றனர். எனவே, இளைஞர்களின் கோரிக்கைகளையும் உள்வாங்கியே தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.”- இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

“ நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் ஒழுக்கமாக – பொறுப்புடன் செயற்பட வேண்டும். எமது நடத்தைமூலமே மக்கள் மத்தியில் மரியாதையை பெறக்கூடியதாக இருக்கும். அவ்வாறு இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தையும் சுற்றிவளைத்து போராடவேண்டிய நிலை உருவாகும்.

எதிரணிக்குரிய பொறுப்பை நாம் சரிவர நிறைவேற்றுவோம். ஆளுங்கட்சி தமக்கான பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். புதிய அமைச்சர்கள் நால்வர்தான் சபைக்கு வந்துள்ளனர். இந்நிலைமை தொடரக்கூடாது. அமைச்சர்கள் பங்கேற்று, நிலைமையை தெளிவுபடுத்த வேண்டும்.

நாடு நெருக்கடியான கால கட்டத்திலேயே உள்ளது. தற்போதைய நெருக்கடி நிலைமை மேலும் உக்கிரமடையலாம். வரிசைகள் முடியபோவதில்லை. எனவே, மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வழிமுறைகள் பற்றி ஆராய வேண்டும். பாதீட்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரமே ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை கிடைத்தது. அதன்பின்னரே 20 கொண்டுவரப்பட்டது. எனவே ,19 மீள அமுல்படுத்தப்பட வேண்டும். குழுக்கள் முறைமை உருவாக்கப்பட வேண்டும். அதில் இளைஞர்களின் பிரதிநிதிகளையும் உள்வாங்க வேண்டும்.

தமது எதிர்காலத்துக்காகவே இளைஞர்கள் போராடுகின்றனர். அவர்கள் கடந்த காலங்களில்போன்று ஆயுதம் ஏந்தவில்லை. கிளர்ச்சி செய்யவும் இல்லை. எனவே, இளைஞர்களின் கோரிக்கைக்கு செவிமடுத்து – அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...