india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

Share

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட அனைத்து குற்றச் செயல்களும் முழுமையாக விசாரிக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரங்களுடன் தொடர்புடைய அனைத்து நபர்களும் தராதரமின்றி சட்டத்தின் முன் கொண்டுவரப்படுவார்கள் என்றும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் இதற்கான முறையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (10) அமைச்சின் விசேட அறிவிப்பை விடுத்து உரையாற்றிய போதே அமைச்சர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

அவரது உரையின் போது, கடந்த காலத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையாகக் கருதப்பட்ட போதிலும் அது இதுவரை உறுதியாகவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். அத்தோடு, டொரிண்டன் பகுதியில் இடம்பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் ரஜு ஜயவீரவின் மரணம் குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல், ஊடகவியலாளர்கள் படுகொலை மற்றும் அரச நிதி முறைகேடுகள் எனப் பல முக்கிய சம்பவங்கள் குறித்துப் புதிய அரசாங்கம் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தி வருவதாகவும், அரசியல் நோக்கம் கொண்ட எந்தவொரு குழப்பங்களுக்கும் தமது தரப்பு அடிபணியாது என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...