Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

Share

 

இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் சமர்ப்பிக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

நிறுவனமொன்றின் ஊடாக இலகுவான கட்டண முறையில் வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதாக கூறி பேஸ்புக் விளம்பரங்களை வெளியிட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பல்வேறு நபர்களை ஏமாற்றி கோடி கணக்கான ரூபாவை மோசடி செய்துள்ளார்.

இது குறித்த முறைப்பாட்டிற்கமைய, மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Man  People Through The

மேற்படி, சந்தேகநபருக்கு எதிராகப் பெருமளவிலான நிதி மோசடிகள் தொடர்பில் 16 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதுடன்,
மேலும் பல முறைப்பாடுகள் எதிர்காலத்தில் கிடைக்கப்பதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

அத்துடன், சந்தேகநபருக்கு எதிராக 10 திறந்த பிடியாணைகளும் 5 திகதியிடப்பட்ட பிடியாணைகளும் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நுகோகொட ஹைலெவல் வீதியில் கட்டடமொன்றில் பேணப்பட்டு வந்த வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு சந்தேகநபர் நீண்ட காலமாக இந்த நிதி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சந்தேகநபருக்கு எதிராக உள்ள முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் சமர்ப்பிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.

மேல் மாகாண வடக்கு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சமந்த விஜேசேகரவின் மேற்பார்வையின் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

 

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...

Shiran Basik
இலங்கை

ஷிரான் பாசிக் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

டுபாயில் கைது செய்யப்பட்டு, நேற்று இரவு அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட...