முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை கையூட்டாகப் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதலீட்டுச் சபை தொடர்பான விடயமொன்றைச் சாதகமாக முடித்துக் கொடுப்பதற்காக குறித்த மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளதாக அவர் மீது இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.