sunshine coast filling up car
இலங்கைசெய்திகள்

அனுமதி பெற்றவர்களுக்கே இனி எரிபொருள் !!!!

Share

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தினமும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவிக்கையில்,

அனுமதிபெற்றவர்களுக்கு மாத்திரமே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கேன்கள் மற்றும் பெரல்களில் எரிபொருள் வழங்கப்படும்.

எரிபொருள் மோசடிகள் மற்றும் தட்டுப்பாட்டை தடுப்பதற்கும் மக்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் முகமாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அலுவலக தேவைகள் மற்றும் கைத்தொழில் நடவடிக்கைகளுக்காக எரிபொருள் கொள்வனவு செய்பவர்கள்
சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்திடம் அனுமதி பெற வேண்டும்.

விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருளைப் பெற்றுக்கொள்பவர்கள் கமநல சேவை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் – என தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...