new photo e1649743324960
அரசியல்இலங்கைசெய்திகள்

7 ஆவது நாளாகவும் தொடர்கிறது அரசுக்கெதிரான போராட்டம்!!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி கடந்த 6 நாட்களாக காலி முகத்திடலில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் போராட்டம் 7 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

இளைஞர், யுவதிகள், பல்கலை மாணவர்கள், மதகுருமார்கள், சமூக நலன் விரும்பிகள் என அனைத்து மக்களும், இன, மத, மொழி கடந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலி முகத்திடலில் ஆரம்பமான இந்த போராட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆதரவுடன் தொடர்ச்சியாக இரவு பகல் பாராது இடம்பெற்று வருகிறது.

ஜனாதிபதி செயலகம் முன்பாக தினமும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, ஆர்ப்பட்டத்தில் பங்குபற்றுவோர் தங்குவதற்கென காலி முகத்திடலில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் என தேவையான உதவிகளும் மக்களால் வழங்கப்பட்டு வருகின்றன.

நேற்று தமிழ் – சிங்கள புத்தாண்டு நாளிலும் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்றது. போராட்டக்களத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றதுடன் பலகாரங்களும் வழங்கப்பட்டன.

‘கோட்டா கோ கம’ என்னும் பெயரிடப்பட்டுள்ள குறித்த பகுதியில், 7 ஆவது நாளாக அரசுக்கெதிரான கோஷங்களுடன் இன்றும் போராட்டம் தொடர்கிறது.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...