20220131 134506 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தீர்வு கிடைக்கும் வரை தொழிலுக்கு செல்லப்போவதில்லை! – வடமராட்சி மீனவர்கள் தொழில் புறக்கணிப்பில்!

Share

வடமராட்சி மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லாது புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் தமது போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து மீனவர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழக மீனவர்களின் அத்துமீறலால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. அதனை கண்டித்து மீனவர்கள் இன்று சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஆதரவுடன் வீதியை மறித்து பந்தல்களை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை முதல் , தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் கடற்தொழிலுக்கு செல்லப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

அதேவேளை ஏனைய பிரதேச மீனவர்களும் தமது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தொழில் புறக்கணிப்பில் ஈடுபடுமாறு வடமராட்சி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 15
உலகம்செய்திகள்

டொனால்ட் டிரம்ப் வருகைக்கு முன்னதாக ஈரான் – சீனா அமைச்சர்கள் பேச்சுவார்த்தை: மத்திய கிழக்கில் சீனாவின் முக்கியத்துவம் அதிகரிப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இப்பிராந்தியத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஈரான்...

Untitled 14
செய்திகள்உலகம்

லண்டனில் யூத சமூகத்தினருக்காகப் பிரத்யேக பொலிஸ் பிரிவு: பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடிவு

லண்டனில் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைத்...

Untitled 13
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம்: காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்கத் தயாராகும் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களைக் கைப்பற்றியுள்ள...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் வசிக்கும் மாலத்தீவினரின் விசா சிக்கல்கள்: நிரந்தரத் தீர்வு குறித்து ஜனாதிபதி முய்ஸு உறுதி

இலங்கைக்கு உத்தியோகபூர்வ அரசமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு, கொழும்பில் வசிக்கும்...