Photo 5 1
செய்திகள்இலங்கை

சதொசவில் குடும்பத்துக்கு ஒரு கிலோ சீனி – வரிசையில் காத்திருக்கும் மக்கள்

Share

சதொசவில் குடும்பத்துக்கு ஒரு கிலோ சீனி – வரிசையில் காத்திருக்கும் மக்கள்

சதொசவில் விற்பனை செய்யப்படும் சீனியைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் சீனிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர்.

சதொசவில் சீனியின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் லசந்த அழகியவன்ன வெளியிட்ட தகவலைத் தொடர்ந்து இதுவரையில் 120 ரூபாக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனி, தற்போது 130 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையில் சதொச விற்பனை நிலையங்களில் ஒரு குடும்பத்துக்கு ஒரு கிலோ சீனி மாத்திரம் விற்பனை செய்யப்படுகிறது என தகவல்கள் வெளிவந்துள்ளன.

மக்கள் அதனை பெற்றுக்கொள்வதற்கு சதொச நிறுவனங்களுக்க முன்னால் நீண்ட வரிசையில் நிற்பதாகவும் சில சதொச நிறுவனங்களில் சீனி நிறைவடைந்தமையால் மக்கள் கொள்வனவுசெய்ய முடியாது வீடு திரும்ப நேரிட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...