chai
இந்தியாசெய்திகள்

புத்தாண்டு தேநீர் விருந்து! – தமிழக கட்சிகள் புறக்கணிப்பு

Share

புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியால் தமிழக கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அந்த அழைப்பை தமிழக கட்சிகள் நிராகரித்துள்ளன.

இது தொடர்பில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில்,

ஆளுநர் தரப்பு அரசுக்கு மேலானதொரு அதிகார மையமாக செயல்பட தொடர்ச்சியாக முயன்று வருகிறது. மக்கள் கோரிக்கைகளை கவனத்தில் எடுப்பதில்லை. தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதில்லை. இந்த நிலையில், நாம் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

full

இதேவேளை,மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவிக்கையில்,

தமிழக மக்களின் நலனுக்கு எதிராக தொடர்ந்து தமிழக ஆளுநர் செயல்பட்டுவருகிறார். தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கக்கூடிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் விரோதமாகவே செயற்பட்டு வருகிறார். இவ்வாறான நிலையில் மனிதநேய மக்கள் கட்சி இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது – என்றார்.

அத்துடன், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழர்களின் உணர்வை அவமதித்து விட்டு விருந்துக்கு அழைப்பது கேலிக் கூத்தாக உள்ளது என தெரிவித்துள்ள நிலையில், தேநீர் விருந்தில் பங்காளிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...