மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பதவி விலகியுள்ளார்.
அத்துடன், அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைக்கு அமைவாக வெற்றிடமான கல்வி அமைச்சின் கூடுதல் பொறுப்பு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராகச் செயற்பட்டு வரும் பிரகலாத் ஜோஷி, இனி கல்வித் துறையையும் கூடுதல் பொறுப்பாகக் கவனிப்பார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.