chai
இந்தியாசெய்திகள்

புத்தாண்டு தேநீர் விருந்து! – தமிழக கட்சிகள் புறக்கணிப்பு

Share

புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியால் தமிழக கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அந்த அழைப்பை தமிழக கட்சிகள் நிராகரித்துள்ளன.

இது தொடர்பில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில்,

ஆளுநர் தரப்பு அரசுக்கு மேலானதொரு அதிகார மையமாக செயல்பட தொடர்ச்சியாக முயன்று வருகிறது. மக்கள் கோரிக்கைகளை கவனத்தில் எடுப்பதில்லை. தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதில்லை. இந்த நிலையில், நாம் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

full

இதேவேளை,மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவிக்கையில்,

தமிழக மக்களின் நலனுக்கு எதிராக தொடர்ந்து தமிழக ஆளுநர் செயல்பட்டுவருகிறார். தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கக்கூடிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் விரோதமாகவே செயற்பட்டு வருகிறார். இவ்வாறான நிலையில் மனிதநேய மக்கள் கட்சி இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது – என்றார்.

அத்துடன், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழர்களின் உணர்வை அவமதித்து விட்டு விருந்துக்கு அழைப்பது கேலிக் கூத்தாக உள்ளது என தெரிவித்துள்ள நிலையில், தேநீர் விருந்தில் பங்காளிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...