modi
செய்திகள்உலகம்

இத்தாலியில் மோடிக்கு அமோக வரவேற்பு

Share

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலிக்கு சென்றவேளையில் அவருக்கு அமோக வரவேற்பு வழங்கபட்டுள்ளது.

இத்தாலி நாட்டில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி அவர்கள் நேற்று டெல்லியில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்டார்.

ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி சர்வதேச பொருளாதார விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இந்திய நேரப்படி 9.30 மணிக்கு அவர் இத்தாலி நாட்டுக்கு சென்றடைந்தார் .

விமான நிலையத்தில் அவருக்கு மிகவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாலியில் வாழும் இந்தியர்கள் திரண்டு வந்து கைகளில் மூவர்ண கொடி ஏந்தியபடி பிரதமர் மோடியை வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து இந்திய பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரோம் நகரில் தரை இறங்கி உள்ளேன் எனவும் இம் மாநாட்டில் சர்வதேச அளவில் முக்கிய வி‌ஷயங்கள் விவாதிக்கப்படும்.

ரோமில் எனது அடுத்த பயண திட்டங்கள் குறித்தும் ஆர்வமாக உள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலியில் இன்றிலிருந்து 31-ந்தேதி வரை 3 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள போகிறார் .

கிறிஸ்தவர்களின் தலைவரான போப் ஆண்டவரையும் வாத்திகனில் பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார்.

அத்தோடு இத்தாலி பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இங்கிலாந்து நாட்டுக்கு செல்கிறார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ்ஜான்சன் அழைப்பை ஏற்று அவர் அங்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...

New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...