karai
இலங்கைசெய்திகள்

இலங்கை – காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து!

Share

இலங்கை – காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து!

இலங்கை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிப்பது தொடர்பில்
பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பில், அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்த பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோர் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

காரைக்கால் மற்றும் இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் நாட்டின் வடக்கு – கிழக்கு பகுதிகளில் சுற்றுலா, மருத்துவம் மற்றும் வணிகம் போன்ற துறைகள் அபிவிருத்தியடையும். அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மேலும் அதிகரிக்கும்.

மேலும் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீனவா்களிடம் ஒப்படைக்கக் கோரியும், கலந்துரையாடப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்திய முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் மற்றும் பிராந்திய பொருளாதார அபிவிருத்தி மேம்பாடு, கூட்டு முயற்சிகள், மற்றும் விவசாயம், கைத்தொழில் சார் முதலீடு மற்றும் கால்நடை துறைசார் மேம்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...