மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியமை காணொளியில் பதிவாகியுள்ளதுடன், குறித்த நபர், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாளிகாவத்தையில் உள்ள பிசிசி பாலம் அருகே சற்று முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர், கஞ்சிபானி இம்ரானின் மாமா என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், மாளிகாவத்தையில் உள்ள பி.சி.சி பாலம் அருகே சற்று முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள உலகத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.