5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

Share

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து பெற்றோர்கள் குழுவொன்று கிரிந்திவெல காவல் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.

கிரிந்திவெல போகஹவத்த ஜினானந்த ஆரம்பப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் சிலர், கிரிந்திவெல மத்திய மகா வித்யாலயத்தில் அமைந்துள்ள பரீட்சை மத்திய நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றியபோதே இந்த அநீதி இடம்பெற்றுள்ளதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முற்பகல் 11.15 மணிக்கு வழங்கப்பட வேண்டிய வினாத்தாள், தமது பிள்ளைகளுக்கு முற்பகல் 11.30 மணிக்கே வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், குறித்த வினாத்தாள் பிற்பகல் 12.15 மணிக்கு மீண்டும் சேகரிக்கப்பட்டதால், தமது பிள்ளைகளுக்குப் பரீட்சைக்கான குறிப்பிட்ட நேரத்தில் அரை மணி நேரத்திற்கு அருகாமையிலான நேரம் பறிபோனதாகவும் பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் தமது பிள்ளைகளுக்குக் கடும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் பெற்றோர்கள், இது தொடர்பில் தீர்வொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்துடன், கம்பஹா வலயக் கல்வி அலுவலக அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பெற்றோருடன் கலந்துரையாடிய போதிலும், அதில் எவ்வித தீர்வும் கிடைக்காததால் பொலிஸில் முறைப்பாடு செய்ததாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
arested 2
இலங்கை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

நேற்றைய தினம், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம்...

QR முறைமை
இலங்கை

QR முறைமை நீக்கப்படுமா?

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையும், வரம்புகளும் நீக்கப்பட வேண்டுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுடன், இலங்கை...

bus bike accident 1
இலங்கை

தாயையும் மகனையும் காவுகொண்ட கோரவிபத்து!

பகமூண, தமன பகுதியில், பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர்...

கடூழிய சிறைத்தண்டனை
இலங்கை

சிறுமி துஸ்பிரயோகம் – சந்தேக நபருக்கு வவுனியா நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.

கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின்...