IMG 20220325 WA0025
இந்தியாஇலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பண்பாட்டு மையம் 28 இல் திறப்பு!

Share

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை திறந்து வைக்கப்படஉள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் எளிமையான முறையில் காணொளி முறையில் குறித்த நிகழ்வு இடம்பெறும் என யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இன்றையமாநகர சபை அமர்வில் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம், அதனை யார் பராமரிப்பது என்பது தொடர்பில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் நீண்டகாலமாக திறந்துவைக்கப்படாதிருந்தது. இந்தநிலையில் தற்போது திறந்து வைக்கப்படவுள்ளது.

இதேவேளை இந்த நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் யாழிற்கான இந்திய துணைத்தூதர் ,யாழ் மாநகர முதல்வர்,மாநகர ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்றையதினம் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இருப்பினும், திறப்பு விழாவிற்கான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை சம்பந்தப்பட்ட தரப்புகளால் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...