Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

Share

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது, நாம் எப்போதும் இந்த நாட்டு மக்களை சமூக பேரழிவுகளிலிருந்து மீட்கப் பணியாற்றியவர்கள். மக்களின் நலன் கருதியே சில விடயங்களில் நாம் ஓரடி பின்வாங்கினோம்.

அவை மனிதாபிமானத்துடன் எதிர்கொண்டவை கோழைத்தனமாகக் கருத வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், அரகலய போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போராட்டக்காரர்களுக்கு கை வைக்கவில்லை.

அத்துடன், கடந்த நாட்களில் இந்தியாவில் எதிர்கொண்ட விதத்தை நாம் சமூக ஊடகங்களில் பார்த்தோம். பங்களாதேஷ் -நேபாளம் எதிர்கொண்ட விதத்தைப் பார்த்தோம். நாம் அரகலய போராட்டத்தில் ஓரடி பின்வாங்கினோம் என்றும், உயிர்களைப் பறித்து, பிள்ளைகளைக் கொன்று, அந்தப் உடல்கள் மீது அரசாங்கத்தைப் பாதுகாக்க முனையவில்லை செய்யவும் மாட்டோம்.

நாம் மனிதாபிமானத்தோடு பிரச்சினையை எதிர்கொண்டதை கோழைத்தனமாகப் பார்க்க வேண்டாம். கோழைத்தனமாகக் கருத வேண்டாம்.

அத்துடன், நாம் எப்போதும் இந்த நாட்டு மக்களை சமூக பேரழிவுகளிலிருந்து மீட்கப் பணியாற்றியவர்கள். பயங்கரவாதத்திலிருந்து மீட்டோம்.

கோவிட்-19 தொற்றுநோயின் போது, குறைந்தபட்ச உயிரிழப்புகளுடன் இந்த நாட்டு மக்களின் உயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தோம்.

அரகலய போராட்டத்தின் போது இராணுவத்தையும் காவல்துறையினரையும் பயன்படுத்தி, ஆயிரக்கணக்கானோரைக் படுகொலை செய்து அரசாங்கத்தைக் காப்பாற்ற முயற்சிக்கும் வாய்ப்பு இருந்தது.

நாம் அப்படிச் செய்திருந்தால் இன்று நாமல் ராஜபக்ச இங்கே நிற்கும் சூழ்நிலை இல்லாமல் போயிருக்கலாம்.

மக்களின் பக்கத்தில் நின்று, ஒரு சமூக பேரழிவிலிருந்து நாட்டின் இளைஞர்களை மீட்க நாம் ஓரடி பின்வாங்கியதை கோழைத்தனம் என்று அரசாங்கமும் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களும் நினைத்தால், அவர்களுக்குத் தவறிவிட்டது என்பதையும் நினைவூட்ட விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...

sl pass port
இலங்கை

போலியான கடவுச்சீட்டு – பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்றைய தினம் நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போது, முன்னாள் நாடாளுமன்ற...