EGG 1
இந்தியாஇலங்கைசெய்திகள்

முட்டை இறக்குதி விவகாரம் – இந்தியா பறந்தார் முக்கியஸ்தர்!!

Share

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விசாரிப்பதற்காக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் இந்தியா சென்றுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அவர் இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முட்டைகள் தொடர்பான அறிக்கை மற்றும் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஆராய்வது இந்த விஜயத்தின் நோக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நாட்டில் முட்டையின் விலையை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அதன் முதல் தொகுதியாக 2 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட முட்டைகளுக்கு இந்திய விலங்குகள் மற்றும் சுகாதாரத் துறை வழங்கிய தரநிலை அறிக்கை இன்னும் வரவில்லை என்று அரசாங்க வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து முட்டைகளை விரைவில் இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அரசாங்க வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர இந்தியா சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...