taliban 1
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் இடம்பெறும் பேச்சுவாா்த்தையில் சீனா!!

Share

ஆப்கான் தொடர்பான பேச்சுவாா்த்தையொன்று பாகிஸ்தானில் இன்று நடைபெறவுள்ளது .

அதில் சீனா கலந்து கொள்ளவதாக அறிவித்துள்ளது.

ஆப்கான் தொடர்பாக இந்தியா கடந்த புதன்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் சீனா கலந்து கொள்ளவில்லை இந்நிலையில் பாகிஸ்தானில் இடம்பெறும் பேச்சுவாா்த்தையில் சீனா கலந்து கொள்ளவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டசெய்தியில்,

ஆப்கான் தொடர்பாக பாகிஸ்தான் இஸ்லாமாபாதில் நடைபெறவிருக்கும் இந்தப் பேச்சுவாா்த்தையில் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளைச் சோ்ந்த முதுநிலை தூதரக அதிகாரிகள் கலந்து கொள்ளகிறார்கள்.

இதை போன்ற பேச்சுவாா்த்தையை இந்தியாவும் கடந்த புதன்கிழமை நடத்தியது எனவும் அதில் இந்தியா உள்பட 8 நாடுகள் கலந்து கொண்ட பேச்சுவாா்த்தைக்கு பாகிஸ்தானும், சீனாவும் வர மறுத்துவிட்டன.

இந் சூழலில், ஆப்கான் தொடர்பாக பாகிஸ்தான் நடத்தும் பேச்சுவாா்த்தையில் கலந்து கொள்ளவீர்களா என சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின்னிடம் ஊடகவியலாளர்கள் வினவினார்.

அதற்கு, ‘ஆப்கானின் நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் அந்த நாட்டுக்கு சா்வதேச நாடுகளுடன் இணக்கத்தை ஏற்படுத்தவும் நடைபெறும் அனைத்து முயற்சிகளையும் சீனா ஆதரிப்பதாகவும் அத்தோடு பாகிஸ்தான் நடத்தும் பேச்சுவாா்த்தையை தாம் வரவேற்பதாகவும் அப் பேச்சுவாா்த்தையில் தாம் கலந்து கொள்ளவோமெனவும் தெரிவித்துள்ளார்.

ஆப்கான் விடையத்தில் சீனாவும் பாகிஸ்தானும் தாலிபான்களுக்கு ஆதரவாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...