glpers
செய்திகள்அரசியல்இலங்கை

வரிச்சலுகை குறித்து வெளியான அதிரடித் தகவல்!!

Share

இலங்கைக்கு ஜி.எல்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படாது என்றே தான் நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடுமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக்குழுவொன்று இலங்கை வந்திருந்தது. என்னுடனும் பேச்சு நடத்தியிருந்தனர். இலங்கையால் நிறைவேற்றப்பட்டுள்ள நிபந்தனைகள், அவற்றின் சாதகத் தன்மை, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் பற்றி விவரிக்கப்பட்டது.

விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரையும் சந்திக்கவுள்ளேன். தலைமையகத்துக்கு முழு தகவல்களும் ஒப்படைக்கப்படும். எனவே, வரிச்சலுகையில் சிக்கல் வராது.” – என்றும் பீரிஸ் குறிப்பிட்டார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...