WhatsApp Image 2021 08 27 at 23.03.47 1
செய்திகள்இலங்கை

கொரோனாவிலிருந்து மீண்ட அஜித் ரோகண குடும்பத்துடன் கொடுத்த போஸ்!!

Share

கொரோனாத் தொற்றுக்குள்ளான முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண பூரண குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

கொரோனாத் தொற்றுக்குள்ளாகி, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அஜித் ரோஹண, பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளார்.  அவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பதை உணர்ந்து முதல் சந்தர்ப்பத்திலேயே உடனடியாக சிகிச்சை பெறுவது மிக அவசியம் எனவும் அதனை தான் செய்ததன் காரணமாகவே இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளேன் எனவும் தெரிவித்தார்.

மேலும் எனது போலி புகைப்படங்களைப் பயன்படுத்தி, தான் வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறேன் என சமூகவலைதளங்களில் பிரசாரம் செய்தவர்கள் தொடர்பில் மிகவும் வருந்துகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தருணத்தில் விரைவாக குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ஆகவே நோயை குறைத்து மதிப்பிடாமல் அறிகுறி தென்பட்ட உடனேயே சிகிச்சை பெறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...

world 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கல்லையில் பரபரப்பு: போதையில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள தங்கல்லை, குடவெல்ல பகுதியில் நேற்று (மே 04) மாலை நபர் ஒருவர்...

world 24
செய்திகள்இந்தியா

தமிழகத் தேர்தலில் தவெக சாதனை வெற்றி: மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின்...

world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...