WhatsApp Image 2021 08 28 at 11.53.43 1
செய்திகள்இலங்கை

பந்துல குணவர்தனவால் சிக்கலில் ஜனாதிபதி, பிரதமர்?

Share

பந்துல குணவர்தனவால் சிக்கலில் ஜனாதிபதி, பிரதமர்?

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட பலர் தொற்றுக்குள்ளாக்குவதற்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பந்துல குணவர்த்தனவின் ஊழியர்கள் பலருக்கு கொரோனாத் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் முதல் தன்னுடன் தொடர்புகளைப் பேணியோர் சுயதனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

அதேநேரம் நேற்று (27) நடந்த தேசிய கொரோனா தடுப்புச் செயலணிக் கூட்டத்தில் அமைச்சர் பந்துல குணவர்த்தன பங்கேற்றிருந்தார்.

இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர், சுகாதார அமைச்சர், இராணுவத் தளபதி, பொலிஸ்மா அதிபர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இவர்கள் அனைவரும் அமைச்சருடன் தொடர்புகளைப் பேணிய முதல்நிலைத் தொடர்பாளர்களாக மாறியுள்ளனர். கந்த நிலையிலையிலேயே மேற்படி அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....