1584793202 arrested 2
செய்திகள்இலங்கை

வாள்களுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள்!

Share

வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இதுவரை இடம்பெற்றுவந்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் கடந்த செப்ரெம்பர், ஒக்ரோபர் மாதங்களிலும், இம்மாதமும் பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வந்துள்ளது. இச்சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் வாள்களுடன் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு வந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த சம்பவங்கள் தொடர்பில் நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

பொலிஸாரின் விசாரணையின்போது அவர்களிடமிருந்து 2 மோட்டர் சைக்கிள், 4 வாள்கள், தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் பொல்லுகள், 15 பவுண் நகை, முகத்தை மறைக்கும் கறுப்பு துணி என்பன மீட்கப்பட்டுள்ளன.

விசாரணைகளின் முடிவில் அவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...