நிதி மோசடி ஒன்றின் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார திஸாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார திஸாநாயக்க இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் விடுவிக்கபட்டுள்ளார்.
அத்துடன், சந்தேக நபருக்கு நீதிமன்றத்தினால் வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டது.