pulamaippiththan
உலகம்செய்திகள்

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்!

Share

பிரபல கவிஞரும் அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத் தலைவருமான புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் காலமானார்.

86 வயதான இவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 9:33 மணியளவில் உயிரிழந்துள்ளார் .

1935-ம் ஆண்டு கோவையில் பிறந்து ராமசாமி எனும் இயற்பெயர் கொண்ட இவர் 1968ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த குடியிருந்த கோவில் திரைப்படத்துக்கு பாடல் எழுதியதன் மூலம் திரை உலகில் கால் பதித்தார்.

இப் படத்தில் இவர் எழுதிய “நான் யார், நான் யார்” என்ற பாடல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலமாகவுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய “தெறி” திரைப்படத்தில் இடம்பெற்ற தாய்மை எனும் பாடலை எழுதியவரும் இவரே.

சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசின் விருதை புலமைப்பித்தன் நான்கு தடவைகள் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
iraan us war
உலகம்

அமெரிக்காவிற்கு பதிலடி வழங்கிய ஈரான் – அமெரிக்க தளங்கள் இருக்கும் நாடுகள் மீது பலத்த தாக்குதல்.

  அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து, ஜோர்டான், குவைத் மற்றும் கத்தாரில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின்...

water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...