Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

Share

 

போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

அண்மையில், தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள போதைக்கு அடிமையானோர் மறுவாழ்வு மையம் ஒன்றில் பேசிய ஃபெடரல் போதைத் தடுப்பு ஆணையரான ஹெண்ட்ரிக் (Hendrik Streeck), ஜேர்மனியில் போதைப்பொருட்களால் பலியானவர்களின் புள்ளிவிவரங்களையும் வெளியிட்டார்.

இந்த விடயமானது தன்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக தெரிவித்த அவர், ஆண்டுதோறும் இப்படி போதையால் பலியாவோர் எண்ணிக்கை குறித்து அறிவிப்பது ஒரு சடங்கு போல் ஆகிவிட்டதை எண்ணி வருத்தமடைந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில், பலியானவர்களின் எண்ணிக்கையானது 2,150 என்ற உயர்ந்த எண்ணிக்கையை பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டில் 2,137 பேர் போதைப்பழக்கத்தால் பலியாகியுள்ளதுடன் அதிகபட்சமாக, 2023ஆம் ஆண்டு 2,227 பேர் பலியாகியுள்ளார்கள்.

இப்படி போதையால் உயிரிழந்தவர்களில் நான்கில் ஒருவர், அதாவது 528 பேர் 30 வயதுக்குக் கீழுள்ளவர்கள், இது 2021ஆம் ஆண்டைவிட 53 சதவிகிதம் அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.

போதையால் உயிரிழந்தவர்களில் 106 பேர் 20 வயதுக்குக் கீழுள்ளவர்கள், எனும் அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

 

Share
தொடர்புடையது
தாய்வானில்
உலகம்

தாய்வானில் முடக்கப்பட்ட இணைய சேவை – சீனாவின் அச்சுறுத்தலின் விளைவாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள்!

தாய்வானில் முன்னெடுக்கப்பட்டு வரும் வருடாந்த ‘ஹான் குவாங்’ இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாகத் தலைநகர் தாய்பேயில்...

ஜப்பானில் கொலை
உலகம்

ஜப்பானில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்!

ஜப்பானில் கல்வி பயின்று வந்த, 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் சிபா (Chiba) மாநிலத்தில்...

hourthis red sea Houthi Rebels Attack Cargo Ship In Gulf Of Aden
உலகம்

சர்வதேச கடற்பரப்பில் தாக்கப்பட்ட சரக்கு கப்பல் – உயிரிழந்துள்ள பணியாளர்கள்!

செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தெப் நீரிணைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது...

பஷார் அல் அசாத்
உலகம்

முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில்சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும்...