ஜப்பானில் கல்வி பயின்று வந்த, 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் சிபா (Chiba) மாநிலத்தில் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், குறித்த கொலையை அவருடன் தங்கியிருந்த 18 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவரே செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமைக்கான காரணம் என அந்நாட்டுப் காவல்துறையினர் தெரிவித்துள்ளதுடன், சந்தேகநபரான 18 வயது இளைஞரை அந்நாட்டுப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, தானும் தனது தாயாரும் அவமதிக்கப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.