தாய்வானில்
உலகம்

தாய்வானில் முடக்கப்பட்ட இணைய சேவை – சீனாவின் அச்சுறுத்தலின் விளைவாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள்!

Share

தாய்வானில் முன்னெடுக்கப்பட்டு வரும் வருடாந்த ‘ஹான் குவாங்’ இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாகத் தலைநகர் தாய்பேயில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டு, வீதிகள் அமைதியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீன படையெடுப்பு அபாயத்தை எதிர்கொள்ளும் வகையில் இந்தப் பயிற்சியானது 10 நாட்கள் நடத்தப்படுகின்றது.

இதன்போது, தாக்குதல் சூழலை செயற்கையாக உருவாக்கிப் பரிசோதிப்பதற்காக மொபைல் இணையச் சேவையின் வேகம் அரசாங்கத்தினால் திட்டமிட்டபடி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த இணைய வேகக் கட்டுப்பாட்டின் போது, நிலையான இணைய இணைப்புகள் மற்றும் வைஃபை (Wi-Fi) சேவைகள் தடையின்றி இயங்கியமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, போலி வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வீதிகளில் பயணித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், வாகனங்களும் வீதியோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த சந்தர்ப்பத்தில், தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-தே மற்றும் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதுவர்கள் பலரும் அவசர மருத்துவ முகாமாக மாற்றப்பட்ட இடங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விநியோக மையங்களைப் பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சீனாவின் முற்றுகை முயற்சிகளை எதிர்கொள்ளும் வகையில் தாய்வான் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை இணைந்து முதல்முறையாக கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் கூட்டுப் பயிற்சியையும் மேற்கொண்டுள்ளன.

பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் தாய்வான் பதிலளித்து வருவதாக அதிபர் லாய் சிங்-தே குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
ஜப்பானில் கொலை
உலகம்

ஜப்பானில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்!

ஜப்பானில் கல்வி பயின்று வந்த, 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் சிபா (Chiba) மாநிலத்தில்...

hourthis red sea Houthi Rebels Attack Cargo Ship In Gulf Of Aden
உலகம்

சர்வதேச கடற்பரப்பில் தாக்கப்பட்ட சரக்கு கப்பல் – உயிரிழந்துள்ள பணியாளர்கள்!

செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தெப் நீரிணைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது...

பஷார் அல் அசாத்
உலகம்

முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில்சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும்...

parlimen president 2
உலகம்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை – ஜனாதிபதியின் தீர்மானம்!

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயல்பாட்டு சபையில் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை...