Flag of India.svg
உலகம்செய்திகள்

திரைமறைவில் ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு!- மேற்குலக நாடுகள் மீது இந்தியா குற்றச்சாட்டு

Share

இந்தியாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளில் ரஷ்யா இரண்டாவது இடத்தை வகித்து வருவதால் அதற்காக உக்ரைன் யுத்தத்தை நடத்துவதற்கு இந்திய பணம் பயன்படுத்தப்படுவதாக மேற்குலகு விமர்சனம் செய்வது நியாயமற்றது என இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருப்பதோடு மேற்குலக நாடுகள் திரைமறைவில் இன்றைக்கும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவில் ஈடுபட்டிருப்பதை என்னவென்று புரிந்துகொள்வது எனக் கேள்வி எழுப்பியுள்ளன.

ஈரானிடமிருந்தும் வெனிசுலாவிடமிருந்தும் எண்ணெய் கொள்வனவு செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டபோது அந் நாடுகளிடமிருந்து கொள்வனவை இந்தியா நிறுத்தியிருந்தபோதும் சீனா தொடர்ந்தும் அந் நாடுகளில் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்து வந்தது. சீனா அவ்வாறிருக்கும் போது இந்தியா ஏன் எண்ணெய் கொள்வனவை வர்த்தகமாக பார்க்கக்கூடாது?

ஒரு வருடத்துக்கு முன்னர் தினமொன்றுக்கு 33 ஆயிரம் பீப்பாய் ரஷ்ய மசகு எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்தது.

கடந்த ஏப்ரல் மாதம் 2 லட்சத்து 77 ஆயிரம் பீப்பாய்களாக இது உயர்ந்ததோடு கடந்த மே மாதம் முதல் தினசரி 8 லட்சத்து 19 ஆயிரம் பீப்பாய்களாக தினசரி இறக்குமதி உயர்ந்துள்ளது.

#WorldNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....