Gas shortage
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொங்கியெழுந்த பெண் தரையில் அமர்ந்து போராட்டம்

Share

நாட்டில் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் மிக நீண்ட வரிசையில் பெற்றோலுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.

இந்தநிலையில் தனக்கு எரிவாயு வழங்கப்படவில்லை எனக் கூறி பெண் ஒருவர் வாத்துவ, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

எரிவாயு கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் பாரவூர்தியொன்றை வழிமறித்து, தரையில் அமர்ந்து போராட்டம் ஒன்றினை நடாத்தியுள்ளார்.

எரிவாயுக் கொள்கலன் கையிருப்பு இல்லை என, எரிவாயு விநியோக நிலைய உரிமையாளர் குறித்த பெண்ணிடம் கூறியதாகவும் இருப்பினும் ஏற்க மறுத்த அவர், பாரவூர்தியை வழிமறித்து போராடியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த வாத்துவ பொலிஸ் எரிவாயு விநியோக முகவர், அந்த பெண்ணுக்கு எரிவாயு வழங்குவதாக உறுதி வழங்கியதன் பின்னர் அவர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டிருந்தார்.

இதேவேளை, நேற்றைய தினம் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதன் மூலம் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என நேற்று அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று விரிவாக ஆராயப்பட்டது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறைந்தது 50 நாட்களுக்காவது மூட வேண்டியிருக்கும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்று தெரிவித்தார்.

இதனடிப்படையில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...