Climate change
செய்திகள்இந்தியா

ஏற்றுக்கொள்ளப்பட்டதா இந்தியாவின் யோசனை?

Share

ஐ.நாவின் மாநாட்டில் காலநிலை தொடர்பான இந்தியாவின் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஐ.நா மாநாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பான படிம எரிபொருள் பயன்பாட்டின் குறைப்பு தொடர்பாக இந்தியாவால் முன்வைக்கப்பட்ட கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் புபேந்தர் யாதவ் கருத்து தெரிவிக்கையில்,

”காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர் படிம எரிபொருளின் பயன்பாட்டினால் தான் உலகின் சில நாடுகள் பொருளாதாரத்திலும், நல்வாழ்விலும் மேன்மை பெற்றுள்ளன எனவும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அதற்குரிய துறையை மட்டும் குறை சொல்லவது நியாயமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு சர்வதேச நாடுகள் தனது சூழல், வலிமை, பலவீனம் ஆகியவற்றின் அடிப்படையில் கரியமில வாயு வெளியேற்றத்தையும் சுத்திகரிப்பையும் சமநிலையில் வைத்திருக்க வேண்டிய கட்டயத்தில் இருக்கின்றோம். .

இவ்வாறு வளரும் நாடுகள் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், தங்கள் நாட்டில் வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களையும் வகுக்க வேண்டிய முக்கிய கட்டுப்பாட்டில் உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...