old man
செய்திகள்இலங்கை

உருக்குலைந்த நிலையில் முதியவரின் சடலம்!

Share

உருக்குலைந்த நிலையில் முதியவரின் சடலம்!

காங்கேசன்துறை பகுதியில் வீடொன்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீமன்காமம் பகுதியில் காணப்படும் வீட்டில் தனிமையில் வசித்து வந்த முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவர் கடந்த சில தினங்களாக வீட்டை விட்டு வெளியே வராத நிலையில், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனைத் தொடர்ந்து அயலவர்கள் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது முதியவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், சடலம் பொஸிசாரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த முதியவர் சில நாள்களுக்கு முன்னரே உயிரிழந்து விட்டார். இதன் காரணமாகவே சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Death penalty 22
இலங்கை

எட்டுப் பேருக்கு மரண தண்டனை – கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

எட்டு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு இடம்பெற்ற...

dollar
வணிகம்இலங்கை

அதிகரித்தது அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி!

இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் பிரகாரம், அமெரிக்க டொலரின்...

mini
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார சற்றுமுன் கைது!

  கையூட்டல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்...

gold
இலங்கை

மீண்டும் மீண்டும் குறைவடையும் தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் தங்க முதலீட்டாளர்கள்!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மேலும் சரிவடைந்துள்ளது. அதன்படி, நேற்றைய தினம் 24 கரட் தங்கம்...