எட்டு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த 1997ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட 08 பிரதிவாதிகளுக்கு இந்த தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் இந்த தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பிரதிவாதிகள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், மற்றொரு பிரதிவாதி இல்லாமல் விசாரணையை நடத்த நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
Sentenced Seven People To Death
பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால், 1997 ஆம் ஆண்டு கொழும்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியில் கொலை மற்றும் பலரை காயப்படுத்தியதற்காக, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய, அரச தரப்பால் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நீண்ட விசாரணைக்கு பின்னர், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.