21 614bfbba53d25
செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் 14 வயது சிறுவன் மீது தாக்குதல்!

Share

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முல்லையடி பகுதியில் 14 வயது சிறுவன் ஒருவன் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டுள்ளார் .

அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக அனைவருடனும் முரண்பட்டு வரும் நபரொருவர் நேற்றையதினம் சிறுவனை தாக்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

அண்மைக்காலமாக பளையில் வசித்துவரும் நபரொருவர் அதிகமானவர்களுடன் வீண் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். பளை பொலிஸ் நிலையத்தில் அவர் மீது அதிகமான வழக்குகளும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் நேற்றைய தினம் (22) குறித்த நபர் சிறுவனின் தாயாரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ள நிலையில் குறித்த சிறுவன் ஆத்திரத்தில் நியாயம் கேட்க சென்றுள்ளான். இதன்போதே குறித்த சிறுவன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளான் என தெரிவிக்கப்படுகிறது .

இத் தாக்குதலில் சிறுவனின் கழுத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ள நிலையில் நோயாளர் காவு வண்டியினூடாக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளான்.

இது தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

21 614bfbba3e074

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...