21 614ba1c8ad2df
செய்திகள்இலங்கை

நாகர்கோவில் மகா வித்தியாலய படுகொலை! -26ஆம் ஆண்டு நினைவேந்தல்

Share

யாழ். நாகர்கோவில் படுகொலை27ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (புதன்கிழமை) தமிழ்த் தேசியக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

யாழ்.வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்கள் உள்ளிட்ட 39 பேரின் 26ஆம் ஆண்டு நினைவேந்தல் தினமே நேற்று நினைவேந்தப்பட்டது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் ஈகைச் சுடரேற்றி அகவணக்கம் மற்றும் மலர் வணக்கம் செலுத்தி, உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்தார்.

1995ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான குண்டுதாக்குதலில் 21 மாணவர்கள் உட்பட 39 பேர் கொல்லப்பட்டனர் .

அத்துடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

21 614ba1c8c0c11

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...