யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கை நாளை தினம் (09.07.2026) முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தேவைக்காக, வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் உள்ள சுமார் 25 ஏக்கருக்கும் அதிகமான காணி, சுவீகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விடயத்தை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக அதிகாரிகழும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், குறித்த காணி அவசியத் தேவைக்காக கையகப்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படும் அறிவித்தல் ஒன்றும் ஒட்டப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.