person registration
செய்திகள்அரசியல்இலங்கை

அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பம்

Share

தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இச் சேவை மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளது என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

கிராமசேவையாளர் ஊடாகதேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர், தனது விண்ணப்பத்தில் சாதாரண சேவையா அல்லது ஒருநாள் சேவையா என்பதை குறிப்பிட வேண்டும்.

பின்னர் பிரதேச செயலகத்தில் தமக்கான திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே பதிவுசெய்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பதாரிகள் இந்த நடவடிக்கை மூலம் தமக்கு வழங்கப்பட்ட திகதிகளில் சென்று தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...