galewela
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசம் சுற்றிவளைப்பு! – இயந்திரங்களுடன் ஐவர் கைது

Share

கலேவெல பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்தில்  சட்டவிரோதமாக இயங்கிவந்த  கல் குவாரியை தம்புள்ளை விசேட அதிரடி படையினர் இன்று  சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது 60 மில்லியன் பெறுமதியான இயந்திரங்களை விசேட அதிரடி படையினர் சுற்றிவளைத்ததுடன், சந்தேகநபர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள்  அனுமதிப்பத்திரத்துடன் கல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களது அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னரும் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை எனவும் விசேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த இடத்தில் உரிமம் புதுப்பிக்கப்படாமல் குவாரி இயங்கி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது.

நான்கு அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள் மற்றும் ஒரு டிப்பர் வாகனங்கள் இதன்போது மீட்கப்பட்டது.  உள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இந்த இயந்திரங்களின் உதவியுடன் கற்கள் மற்றும் மண்ணை அகற்றி வருவதாகவும் விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

இரண்டு கல்குவாரிகளும் தம்புள்ளை பகுதியில் உள்ள வர்த்தகர்கள் இருவருக்கு சொந்தமானது என விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

பிரதான வீதியில் இருந்து 200-300 மீற்றர் தூரத்தில் குவாரி அமைந்திருந்ததாக விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...