Hemantha Herath
செய்திகள்இலங்கை

ஊரடங்கை நீக்க திட்டங்கள் வேண்டும்! – சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை

Share

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதானால் அதற்கான சரியான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டை திறக்கும்போது மீண்டும் ஆரம்ப நிலைக்கு சென்றால் கொரோனாத் தொற்று முடிவடையாது என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதானால் தற்போதே பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பிரிவினரால் திட்டம் வகுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு திட்டம் வகுக்கப்பட்டால் மட்டும் நாட்டை திறக்கலாம் என்பது குறித்து தீர்மானிக்க முடியுமென்றும் அவ்வாறு திட்டங்கள் வகுக்கப்படாவிட்டால் நாட்டை திறப்பதில் சிக்கல் ஏற்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...