Hegelia Rambukkala
இலங்கைசெய்திகள்

ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுமா? – 30ம் திகதி இறுதித் தீர்மானம்

Share

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஒக்ரோபர் முதலாம் திகதி திறப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதன்போது கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், இது தொடர்பான தீர்மானம் இம்மாதம் 30 ஆம் திகதி எடுக்கப்படும்.

சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்கெல இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீக்கும் போது மக்கள் முறையான சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்வதன் மூலம் கொரோனா பரவலை வெற்றிகரமாக ஒழிக்க முடியும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய நிலைமையை அவதானிக்கும் கொரோனா ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் பெருமளவு தடுப்பூசி வழங்கிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதல் 10 நாடுகளுள் இடம்பிடித்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...