varna scaled
இலங்கைஉலகம்செய்திகள்

தமிழீழ எழுச்சிப் பாடகர் வர்ணராமேஸ்வரன் காலமானார்

Share

மாவீரர் நாளில்  துயிலுமில்லங்களில் ஒலிக்கப்படும் ‘தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே…’ எனும் உணர்ச்சிகரமான பாடல்  உட்பட பல பாடல்களை பாடிய சங்கீத, மிருதங்க கலாவித்தகர், இசைக் கலைமாமணி வர்ணராமேஸ்வரன் உயிரிழந்துள்ளார்.

இவர் இலங்கை வானொலி மற்றும் தொலைக்காட்சிகளிலும் இசைக்கலைஞராக விளங்கியுள்ளதோடு பல நிகழ்ச்சிகளுக்கும் இசை அமைத்துமுள்ளார்.

போர்ச் சூழல் காரணமாக கனடாவில் புலம்பெயர்ந்து குடியேறிய இவர் அங்கு தமிழிசை பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டதோடு பல பகுதிகளிலும் இசை வகுப்புக்களையும் நடத்தியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று கனடாவில் காலமாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவரது தமிழீழ தாயகப் பாடல்கள் சாகா வரம் பெற்று இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...