pg4 1hhhh
இலங்கைசெய்திகள்

போக்குவரத்து விதிமீறல் – 1,25,000 ரூபா அபராதம்!

Share

மதுபோதையில் போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்றவருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிபதி நளினி சுகாதாரன் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

அவர் மீது 7 குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து பொலிஸார் குற்றப்பத்திரம் தாக்கல் செய்தனர்.

அதன்படி மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை , காப்புறுதி பத்திரமின்மை , வரிப்பத்திரமின்மை, தலைக்கவசமின்றி ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை, தலைக்கவசம் அணியாதவரை ஏற்றி சென்றமை மற்றும் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி சென்றமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன

குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்து நீதிமன்று தீர்ப்பளித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...