ஜி.எல்.பீரிஸ்
இலங்கைசெய்திகள்

புதிய அரசமைப்புக்கான ஆரம்பக்கட்ட வரைவு விரைவில்

Share

புதிய அரசமைப்புக்கான ஆரம்பக்கட்ட வரைவு நகல் இவ்வருடத்துக்குள் வெளியிடப்படும் – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ புதிய அரசமைப்புக்கான வரைவு நகலை தயாரிப்பதற்காக ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவால் நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது.

அந்த குழுவானது அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் என பல தரப்புகளுடனும் சந்திப்புகளை நடத்தி ஆலோசனைகளையும், யோசனைகளையும் பெற்றது.

இதன்படி ஆரம்பக்கட்ட வரைவு நகல் இவ்வருடத்துக்கு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவிடம், நிபுணர்கள் குழுவால் கையளிக்கப்படும்.

அதன்பின்னர் பரந்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் புதிய அரசமைப்பு இயற்றப்படும். என்றார்.

அதேவேளை, புதிய அரசமைப்பு நிச்சயம் இயற்றப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவும் வழங்கியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...

ranil d
இலங்கை

கொழும்பு கோட்டை நீதிமன்றில் ரணில் ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு...

Death penalty 22
இலங்கை

எட்டுப் பேருக்கு மரண தண்டனை – கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

எட்டு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு இடம்பெற்ற...

dollar
வணிகம்இலங்கை

அதிகரித்தது அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி!

இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் பிரகாரம், அமெரிக்க டொலரின்...