li
இலங்கைசெய்திகள்

குறைக்கப்பட்டன எரிவாயு விலைகள்

Share

தற்போது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களின் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இது தற்போது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலையான 2,750 இலிருந்து 2675 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 30 ரூபாவாலும் 2.5. கிலோ கிராம் சிலிண்டரின் விலை 14 ரூபாவாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை புதிய விலை 1071 ரூபாவாகவும் 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 506 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...