tmvp
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர்களுக்கு செய்த கொடுமையே ஆட்சியாளர்களுக்கு சாபக்கேடாக மாறியுள்ளது!

Share

73 வருடமாக தமிழ் மக்களுக்கு செய்த கொடுமை, தற்போது சிங்கள ஆட்சியாளர்களுக்கு சாபமாக மாறிவிட்டது. – இவ்வாறு புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் தமது அன்றாட வாழ்க்கைக்காக வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் கைவிடப்பட்டு 13 வருடங்கள் ஆன நிலையிலும், தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

தமிழ் மக்களுக்கு விளைவித்த பாவமே தற்போது சாபக்கேடாக மாறி இந்த ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்பும் நிலையை உருவாகி உள்ளது.

யார் நாட்டை ஆட்சி செய்தாலும் நமக்கு பிரச்சினை இல்லை. தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து அடிப்படை உரிமையினை பெற்று தருவதையே நாம் கேட்கின்றோம்.

ஆனால் நாட்டு மக்கள் வறுமைக்குள் சிக்குண்டு அழிவடைந்தாலும் பிரச்சனை இல்லை. தாம் ஆட்சியை விட்டு விலகப்போவதில்லை என்று அரசாங்கம் விடாப்பிடியாக உள்ளது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...