tmvp
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர்களுக்கு செய்த கொடுமையே ஆட்சியாளர்களுக்கு சாபக்கேடாக மாறியுள்ளது!

Share

73 வருடமாக தமிழ் மக்களுக்கு செய்த கொடுமை, தற்போது சிங்கள ஆட்சியாளர்களுக்கு சாபமாக மாறிவிட்டது. – இவ்வாறு புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் தமது அன்றாட வாழ்க்கைக்காக வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் கைவிடப்பட்டு 13 வருடங்கள் ஆன நிலையிலும், தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

தமிழ் மக்களுக்கு விளைவித்த பாவமே தற்போது சாபக்கேடாக மாறி இந்த ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்பும் நிலையை உருவாகி உள்ளது.

யார் நாட்டை ஆட்சி செய்தாலும் நமக்கு பிரச்சினை இல்லை. தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து அடிப்படை உரிமையினை பெற்று தருவதையே நாம் கேட்கின்றோம்.

ஆனால் நாட்டு மக்கள் வறுமைக்குள் சிக்குண்டு அழிவடைந்தாலும் பிரச்சனை இல்லை. தாம் ஆட்சியை விட்டு விலகப்போவதில்லை என்று அரசாங்கம் விடாப்பிடியாக உள்ளது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...