26 12
இலங்கைசெய்திகள்

தேர்தலில் தமிழர்களிடையே பிளவு : இந்திய ஊடகம் எடுத்துரைப்பு

Share

தேர்தலில் தமிழர்களிடையே பிளவு : இந்திய ஊடகம் எடுத்துரைப்பு

இலங்கையின் ஏமாற்றமடைந்த தமிழர்கள் இந்த தேர்தலில் பிளவுபட்டுள்ளனர் என்று இந்திய செய்தித்தாள் ஒன்று கருத்துரைத்துள்ளது.

நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள கோரிக்கைகள் தொடர்பாக தென்னிலங்கைத் தலைமையுடனான ஏமாற்றம் மற்றும் பிளவுபட்ட தமிழ் அரசியல் என்பன அவர்களை வெவ்வேறு தெரிவுகளைக் கருத்தில் கொள்ள வழிவகுத்துள்ளதாக குறித்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் வடபகுதி தமிழ் வாக்காளர்கள், போரினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அடுத்தடுத்த அரசாங்கங்களின் முயற்சிகள் போதுமானதாக இல்லை என்று கூறுகின்றனர்.

இதற்கிடையில், நீதி மற்றும் அரசியல் தீர்வுக்கான அவர்களின் கோரிக்கைகளும் தொடர்கின்றன. இந்தநிலையில் இலங்கையின் வடபகுதி தமிழ் வாக்காளர்கள், இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய ஒரு வேட்பாளருக்கும் நிச்சயமாக தோற்கக்கூடிய ஒருவருக்கும் இடையில் இரண்டு பிரிவுகளாக மாறியுள்ளனர்.

தமிழர்களில் சிலர், சிங்கள வேட்பாளர்களில் முன்னணியில் உள்ள ஒருவருக்கு ஆதரவளித்து வரும் நிலையில், சிலர் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளனர்.

இலங்கையின் தேர்தல் வரைபடத்தின் இலக்கண யதார்த்தத்தின் அடிப்படையில், இலங்கை நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கை தளமாகக் கொண்ட சில அரசியல் மற்றும் சிவில் சமூகக் குழுக்களால் கூட்டாக களமிறக்கப்பட்ட தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனால் வெற்றிபெற முடியாது என்பது ஒவ்வொரு தமிழ் வாக்காளருக்கும் நன்றாகத் தெரியும்.

எனினும் தங்கள் குறைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவே தமிழ் பொதுவேட்பாளரை தமிழ் வாக்காளர்கள் ஆதரிப்பதாக இந்திய நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...