image 961255b90b
இலங்கைசெய்திகள்

வட்டமேசை மாநாடு – இலங்கையும் பங்கேற்கிறது

Share

சீனா, இந்தியா, சவூதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட ஜி7 நாடுகளின் பங்குபற்றுதலுடன் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கடன் தொடர்பான வட்டமேசை மாநாட்டில் இலங்கையும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எத்தியோப்பியா, சாம்பியா மற்றும் கானா ஆகிய ஜி20 பொதுவான கட்டமைப்பின் கீழ் கடன்களை கோரிய நாடுகளின் அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்த கூட்டம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஜி 20 குழுவின் தற்போதைய தலைவரான இந்தியா ஆகியவற்றினால் இணைந்து நடத்தப்படவுள்ளதுடன், ஜி20 நிதி அதிகாரிகள் எதிர்வரும் 23 முதல் 25 ஆம் திகதி வரை வட்டமேசையின் நேரடி கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

வட்டமேசையில் அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர்கள் மற்றும் தனியார் துறை பங்கேற்பாளர்களின் பாரிஸ் கிளப் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

பாரம்பரிய கடனாளிகள் முதல் பணக்கார பொருளாதாரங்களில் புதிய கடன் வழங்குபவர்கள் வரை, அத்துடன் கடன் நெருக்கடியை எதிர்கொள்ளும் நாடுகள் மற்றும் தனியார் துறையை ஒன்றிணைப்பதே வட்டமேசை மாநாட்டின் நோக்கம் என்று நாணய நிதியம் அறிவித்துள்ளது.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...