Provincial Council election
அரசியல்இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது??

Share

எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதியன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படும் சாத்திக் கூறுகள் காணப்படுவதாக அறியமுடிகிறது.

குறித்த தினத்தில் தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் தீர்மானிக்கவில்லை என்று அரசியல் கட்சிகளின் செயலாளார்கள் விடுத்துள்ள அறிவிப்புகள் மூலம் தெரியவருகிறது.

தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகளை இன்று (15) விநியோகிக்க முடியாது என்று கட்சியின் பொதுச் செயலாளர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா செவ்வாய்க்கிழமை (14) காலை இடம்பெற்ற சந்திப்பில் அறிவித்துள்ளார்.

உரிய பணம் செலுத்தப்படும் வரை வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படமாட்டாது என்று அரசாங்க அச்சக திணைக்களம் தமக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, தபால் மூல வாக்களிப்புக்குத் தேவையான வாக்குச் சீட்டுகள் தொடர்பான பிரச்சினையை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்கொண்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுமாறும் பின்வாங்க வேண்டாம் என்று ஆணைக்குழுவின் தலைவரிடம் கூறியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வளாகத்தில் இருந்து வெளியேறுகையில் மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்த அவர், சட்டமா அதிபரிடம் இருந்து தனக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்றும் மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்ததாக மத்தும பண்டார எம்.பி குறிப்பிட்டார்.

இதேவேளை, நிதி பிரச்சினைகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்க்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்று ஆணைக்குழுவின் சந்திப்பின் மூலம் தெரியவருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவும்
தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...